பெய்ஜிங்,ஜூன் 18- கொரோனா நோய் பாதிப்பை எதிர்த்து போராட ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி வழங்க ஒப்பு தல் அளித்துள்ளது. சீனா ஆதரவில் இயங்கும் ஆசிய உள்கட்டமைப்பு முத லீட்டு வங்கி (ஏஐஐபி) இந்தி யாவுக்கு 750 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5712 கோடி) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இணை நிதியுதவி திட்டம் வணிகங்களுக் கான பொருளாதார உதவியை வலுப்படுத்துதல், சமூக பாது காப்பு வலைகளை விரிவு படுத்துதல் மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. மே மாதத்தில், தொற்று நோய்க்கு இந்தியாவின் அவசரகால தேவைக்கு உதவ வங்கி 500 மில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த இரண்டு கடன் உதவிக ளும் பொது மற்றும் தனியார் துறைகள் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட உதவும் என்று வங்கி அறிவித்துள்ளது.